நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படத்திற்கு இடைக்கால தடை..!
செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் 5-ஆம் தேதி வெளியாகவிருந்த நெஞ்சம்மறப்பதில்லை படத்தின் படப்பிடிப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ரேடியன்ஸ் மீடியா மனுத்தாக்கல் செய்திருந்தது.
அதில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் தங்களுக்கு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நெஞ்சம்மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.






