அதிகரிக்கும் காற்றின் வேகம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
தென் தமிழக கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் நாட்டு வடக்கு மற்றும் விசைப்படகு மீனவர்களை மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் 8,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.





