தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்து ஜனவரி 31ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விடுமுறை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
10, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடரப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.






