வீட்டிற்குள் புகுந்த முள்ளம்பன்றி..!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வீட்டிற்குள் புகுந்த முள்ளம் பன்றி வனப்பகுதியில் விடப்பட்டது. குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டெருமை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி ஆகியவை குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் படையெடுக்கின்றன.
கிருஷ்ணாபுரம் பகுதியில் மகேஷ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த முள்ளம்பன்றியை தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.






