கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்..!
திருவள்ளூரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி அதிகரித்துள்ளது.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ரயில்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.






