மைசூர் நஞ்சன்கோடில் கடுமையான மழையால் வெள்ளம்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
மைசூர் நஞ்சன்கோடு, கோனிக்கோபால் ஆகிய பகுதியில் கடுமையான மழையால் வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள்.

நஞ்சன்கோடு பாலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. அதனால் சத்தி வழியாக மைசூர் எந்த வாகனத்திலும் போக வேண்டாம் என தவித்து வரும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




