பிளாஸ்டிக் டிரம்மில் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பிளாஸ்டிக் டிரம்மில் விவசாயி ஒருவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி விரியன் பாம்பு 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது.
கூத்தம்பூண்டியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் வீட்டின் அருகே வலம்வந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்துள்ளார்.
அதனை வனத்துறையினர் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றபோது அது சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குட்டிகளை டிரம்மில் ஈன்றது தெரியவந்தது.






