குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் – அமெரிக்க அதிபர்
அமெரிக்காவில் ஏழ்மையில் இருக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்கிறா.ர் இந்த திட்டத்திற்காக அவர் 45 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்ள இருக்கிறார்.
குறைந்த வருமானம் கொண்டவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் ஆண்டு முழுவதும் உணவு தருவார் என்றும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை விளக்கி இருப்பதாகவும் வெள்ளை மாளிகை நிர்வாகி கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான நிதியை பெற காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும். தமிழகத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்து பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






