போலி பண பரிவர்த்தனை மூலம் தனியார் வங்கியில் மோசடி..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட வங்கியின் துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரகடம் பகுதியில் தனியார் வங்கியில் பணிபுரியும் விஜய் அங்கு வங்கி கணக்கு வைத்திருந்த ஜானகிராமன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து போலி பண பரிவர்த்தனை மூலம் 5.6 லட்சம் ரூபாய் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அளித்த புகாரில் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் பண பரிவர்த்தனைக்கு உதவிய நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.





