குளத்தை துர்வாரியதாக பொய் கணக்கு.. ரூ.6 லட்சம் கையாடல்..!
நாகர்கோவில் அருகே குளத்தை தூர்வாரியதாக பொய் கணக்கு காண்பித்த வழக்கில் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தன் குளம் உள்ளது.
இங்கு கடந்த 25 ஆம் ஆண்டு தூர் வாரியதாக கணக்கு காண்பித்து 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது. நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்ததில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போதைய பொதுப்பணித்துறை உதவி செயலாளர் உதவி பொறியாளர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். ஆனால் ஒப்பந்ததாரர் ராஜகோபால் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதுவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.






