வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் காவல்துறையில் ஒப்படைப்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் காக்கி உடையணிந்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை மடக்கி பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மாருதி ஆல்டோ கார் ஒன்றில் வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த நபர் தலைக்கவசம் முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
அவனது சீருடையில் சந்தேகம் கொண்டு சிலர் விசாரித்தபோது தான் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டியாக வேலை செய்பவன் என்பது தெரியவந்தது.






