முதல்வர் காருக்குள் கடிதம் வீசிய நபரை நேரில் அழைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி..!
தன் காருக்குள் கடிதம் வீசிய பல வியாபாரியை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சுற்றுப்பயணத்தில் இருந்த முதலமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் .
அப்போது பழ கடை வைத்திருக்கும் செல்வராஜன் என்ற வியாபாரி ஒரு கடிதத்தை முதல்வரிடம் கொடுக்க முயற்சி செய்து முடியாததால் காருக்குள் வீசியுள்ளார். தை பார்த்த பாதுகாப்பு அதிகாரி காருக்குள் என்ன வீசுகிறாய் என கேட்டு செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் பழ வியாபாரி செல்வராஜை அழைத்து பேசி முதல்வரிடம் கடிதத்தை கையில் கொடுக்க வேண்டும் வீசக் கூடாது என்று அறிவுரை கூறி புகைப்படமும் எடுத்துக் கொண்டார் . அங்கிருந்து விடைபெற்று செல்வராஜ் முதல்வர் உத்தரவின் பேரில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.






