சென்னையில் டிரோன் பறக்கத் தடை..!
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
144 தடை உத்தரவின் படி டிரோன்கள், ஆளில்லா சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக தடையை மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை என சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






