கடன் தொல்லையால் விபரீதம்.. மகளைக் கொன்று ஒரே கயிற்றில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை..!
சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் மகனை கொன்றுவிட்டு தந்தையும் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த வெங்கடேஸ்வரன் தான் யார் யாரிடம் கடன் வாங்கியுள்ளார் என்பது போன்ற பட்டியலை எழுதி வைத்ததையடுத்து கடன் தொல்லையால் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மனைவி நிர்மலா வெளியில் சென்றிருந்த நேரத்தில் வெங்கடேசன் மகள் பூஜாவை கொன்று மகனுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.






