வீரர்களின் மரணத்தை கேலி செய்ததால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறிய இயக்குனர்..!
மலையாள இயக்குனர் அலி அக்பர் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் ஒரு தரப்பினர் ராணுவ வீரர்களின் மரணத்தை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மலையாள இயக்குனர் தனது மனைவியுடன் தனது இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.






