சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர்..!
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். இதயம் முரளி, இம்மோர்ட்டால், I’m Game, The Paradise, மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. ஜூலை 10-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சிறு வயதில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது வீட்டிற்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்புகளுக்கு செல்வது வழக்கம். அப்போது ஒரு பையன் என்னை ஈவ்டீசிங் செய்தான். முதல் நாள் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். இரண்டாம் நாளும் அப்படியே நடந்தது. ஆனால், மூன்றாவது முறையும் அவர்கள் எல்லை மீறியபோது எனக்கு கடுமையான கோபம் வந்தது.
கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நான், உடனே அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் தலையிலேயே வீசினேன். அவனுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். பார்ப்பதற்கு நான் மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் தெரியலாம். ஆனால், யாராவது தப்பு செய்தால், அமைதியாக இருக்க கூடாது. கண்டிப்பாக திருப்பி அடிக்க வேண்டும்.





