‘அசுரன்’ படத்தை பாராட்டிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன்
எதிரிகளை இவ்விருதை எடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்றுதான் என்பதை அசுரன் திரைப்படம் சொல்லியிருப்பதாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் நாவல்களை இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடிந்ததால் பல நாவல்களை திரைப்படமாக்கலாம் என்ற நம்பிக்கையை வெற்றிமாறன் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற அணி ஆடை நாவலையும் யாரேனும் படுவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அசுரன் படத்திற்கு பல விருதுகள் அணிவகுத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சரவணன் பின்னணி இசை படத்திற்கு மிகுந்த பலம் என கூறியுள்ளார். ஒரே மண்ணில் பிறக்கிறோம் ஒரே மொழியை பேசுகிறோம். இது போதாதா எல்லாரும் சேர்வதற்கு என்று படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தை போன்று அந்த ஆசை நிறைவேறும் நாளுக்காக காத்திருப்போம் என சரவணன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




