தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா: இன்று 10,448 பேருக்கு தொற்று உறுதி: 270 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் தற்போது 1,14,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10.448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 88 ஆயிரத்து 2746 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 21,058 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 44ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா இன்று 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,420 பேரும், ஈரோட்டில் 1,123 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.






