மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கிறிஸ்டோபல் புயல்!
மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட புயல் அமெரிக்காவின் ஆர்லேண்டோவில் கரையை கடந்தது. கிறிஸ்டோபர் என பெயரிடப்பட்டிருந்த இந்த வெப்பமண்டல புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சேதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டதாக சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.







