மனித உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் அழிக்கிறது..!
மனித உயிர் அணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட் மூலக்கூறை ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித குலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் செல் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில் ஹெபாரேட் சல்ஃபேட் எனப்படும் கார்போஹைட்ரேட் மூலமாகவே நுரையீரலின் மேற்பரப்பில் கதவை போன்று அமைந்துள்ள ஏசிஇ2 எனும் மூலக்கூறை சிதைத்து கொரொனா வைரஸ் நுரையீரலுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.







