குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை வண்டலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.






