இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்..! தந்தையும் சண்டையிட்டதால் அதிர்ச்சி..!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடகரையில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயம் அடைந்த மாணவனின் தந்தை ஆத்திரத்தில் எதிர்தரப்பு மாணவனை பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இணையதளத்தில் வெளியான இந்த வீடியோவின் அடிப்படையில் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.





