இளையராஜாவின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த சித்ரா..!
இசையமைப்பாளர் இளையராஜாவின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பாடலை பாடி சின்னக்குயில் சித்ரா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள சித்ரா அதில் தனது தந்தையாகவும், குருவாகவும் இருப்பவர் இளையராஜா எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 1990ஆம் ஆண்டு கிழக்கு வாசல் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் பாடிய வந்ததே குங்குமம் தந்ததே சம்மதம் என்ற பாடலை பாடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.






