நீதிபதி வனிதா மறைவுக்கு தலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!
தஞ்சையில் கொரொனா பரவலின் காரணமாக உயிரிழந்த நீதித்துறை நடுவர் வனிதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் நீதிபதி வனிதா உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தியதாக தெரிவித்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.






