உயிரிழந்தவரை உயிருடன் இருப்பதாக காட்டிய சான்றிதழ்..!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிச்சைமணி என்பவரின் மகள் சுபிதா. இந்திய மருத்துவ நிறுவனத்திடம் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில் தனது தந்தையிடம் உள்ள சொத்துக்களை மாற்றுவதற்காக அவர் நலமுடன் இருப்பதாக கோவையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவர் மருத்துவ சான்றிதழ் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
அந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ராதாகிருஷ்ணனை மருத்துவ பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.






