தேசத்தின் மீது மத்திய அரசுக்கு மரியாதை இல்லை : பிரியங்கா காந்தி
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண பணிகளுக்கு வேண்டிய நிதிகளை அரசு கொடுக்காமல் இருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மக்கள் மீது தேசத்தின் மீது எந்தவித மரியாதையும் இல்லை என்பதையே மோடி அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி இரண்டாவது நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் அவரது ஐந்து கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும் பிரியங்கா காந்தி விமர்சித்து இருக்கிறார்.





