சங்கர் படத்தில் கதாநாயகியாக க்யாரா அத்வானி தேர்வு..!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக க்யாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
மேலும் தமிழில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களில் நடித்த கியாரா அத்வானி இந்த திரைப்படத்தில் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரண் இணையும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.






