போலீசாருக்கு வீடியோ மூலம் சவால் விட்ட கஞ்சா வியாபாரி கைது
போலீசாருக்கு வீடியோ மூலம் சவால்விட்ட கஞ்சா வியாபாரியை கடலூர் மாவட்ட மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலியில் மணிகண்டன் என்பவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை போலீசாரால் கைது செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து மந்தாரகுப்பம் போலீசார் கஞ்சா வியாபாரி மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




