பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு..!
பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது உத்திரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் பெர்ஸ்வாடா வில்சன் மற்றும் அனுப்சோணி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்களுடன் அம்பேத்காரும் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் ஒரு குறிப்பிட்ட நூலைப்பற்றி அமிதாப் பேசியதாக கூறப்படுகிறது. அவரின் பேச்சு மத உணர்வைப் புண்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






