கடற்கரையில் ஒதுங்கிய 2 சிறுமிகளின் உடல் மீட்பு..!
கடற்கரையில் இரண்டரை வயது குழந்தை மற்றும் நான்கு வயது சிறுமியின் உடல்கள் ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் இரண்டரை வயது குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியது.
பொதுமக்கள் போலீசருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.





