புழல் ஏரியில் மிதக்கும் இளம் பெண்ணின் சடலம்!
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்களையும் பட்டு கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தீபா. நேற்று மாலை முதல் தீபா காணாமல் போன நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை புழல் ஏரியில் தீபாவின் சடலத்தை மீட்ட செங்குன்றம் போலீசார் குழந்தை இல்லாததால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் மரணத்திற்கு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.






