வரும் 14ஆம் தேதி துணை முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்..!
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை கூட பெற்றுத் தரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 14 ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் பொழுது மழையால் பாதிக்கப்பட்டு ஓர் ஆண்டு ஏன் காப்பீட்டு தொகையை பெற்று தரவில்லை என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.






