பாஜக தலைவரின் மகனுக்கு ஆயுள் தண்டனை..!
இளம் பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புல்கித் ஆர்யாவின் விடுதியில் வேலை பார்த்த அன்கிதா பந்தாரியை (19), விருந்தினர்களுடன் நெருக்கமாக இருக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரை கொலை செய்துள்ளார். ஆயுள் தண்டனையுடன் மூவருக்கும் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.





