ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எதிராக பைக் டாக்சி ஓட்டுநர்கள் புகார்..!
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக பைட் டாக்ஸி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஓலா, உபர், ராபிட்டோ போன்ற நிறுவனங்கள் 20,000 பேர் பைக் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தங்களை பணிபுரியவிடாமல் சில ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சுறுத்துவதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடும் நடவடிக்கை எடுக்க கோரி தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கத்தில் தமிழ்நாடு பைக் டேக்ஸி சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.





