கொலுசு திருகாணியை விழுங்கிய 3 வயது சிறுவன்..!
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சு குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்தனர்.
பெரம்பலூர் அருகே எருகப்பட்டு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி தவறுதலாக கொலுசு திருகாணியை விழுங்கிவிட்டார்.
அது மூச்சுக் குழாய்க்குள் சென்று விட்டது. எக்ஸ்ரேவில் தெரிய வந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அதனை பெற்றோர் அனுமதி தர சிக்கலான இடத்திலிருந்து திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் சாதுர்யமாக அகற்றியது. இப்பொழுது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





