டெல்லி தடியடி – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
தடியடி தொடர்பான வீடியோக்களை தான் வைத்துள்ளதாக தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கூறியுள்ளார். வீடியோக்களை பார்க்க நேரம் இல்லை, பார்க்கவும் விரும்பவில்லை என தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதில் அளித்துள்ளார்.






