குற்றால அருவிகளுக்கு செல்ல தடை..!
குற்றால அருவிகளில் வரும் 14 மற்றும் 15 தேதிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியரை சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரொனா நோய் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் குற்றாலம், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.






