கொரொனா நோயாளி இறந்ததால் ஆம்புலன்சுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட உறவினர்கள்..!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதியுடன் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

 

சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்த நிலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் கட்டடத்தின் மீது கற்களை வீசியதுடன் மருத்துவமனை ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் சாலைக்கு வந்தவர்கள் அத்தாணி பகுதியிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு தீ வைத்தனர்.

 

தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்து வன்முறை கூட்டத்தை கலைக்க போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

 

மேலும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பெற்றோரை கொன்ற பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற 15 வயது சிறுமி மற்றும் சகோதரன்..!

ஆப்கானிஸ்தானில் பல காலமாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த மோதல்களில் சில சமயங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை குறி வைத்து அவர் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக அரசு படையினருக்கு ஆதரவாக இருப்பவர்களையும் அரசு படையினருக்கு ரகசிய தகவல்கள் வழங்குபவர்களையும் ஈவு, இரக்கமின்றி தலிபான்கள் கொன்று குவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தனது தந்தை மற்றும் தாயை கொன்ற பயங்கரவாதிகளை 15 வயது நிரம்பிய சிறுமி சுட்டுக் கொன்று பழிதீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்த போது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

15 வயது சிறுமி கோமர் குல். இவரது குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். தாய் மற்றும் தந்தையுடன் அந்த சிறுமி வசித்து வந்துள்ளார். கிராம தலைவராக செயல்பட்டு வந்த கோமர் குல் தந்தை ஆப்கன் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள் அவரை கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியே தரதரவென இழுத்து வந்து தந்தையையும், தாயையும் கடுமையாக தாக்கினர்.

 

இறுதியாக தந்தை மற்றும் தாய் வீட்டு வாசலில் வைத்து சகோதரரின் கண்முன்னே சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே ஆத்திரமடைந்து தனது தந்தை வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். தந்தை மற்றும் தாய் கொல்லப்பட்டு கிடப்பதை கண்ட அதிர்ச்சியில் பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று அவருக்கு எண்ணம் வந்துள்ளது.

 

வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த தலிபான்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் இரண்டு தலிபான்கள் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பெற்றோர் உயிரிழக்க காரணமான தலிபான்களை குறிவைத்து சகோதரனும் தாக்குதல் நடத்தினான். அந்நாட்டு அதிபர் உள்பட அனைத்துத் தரப்பினரும் சிறுமிக்கும், சகோதரனுக்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்‌க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கும் மோடி..!

கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இந்தியா – அமெரிக்கா இடையிலான கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.

 

இந்தியா, அமெரிக்கா வர்த்தக கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்தியா ஐடியா உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது உலக அளவில் பொருளாதார மீட்ச்சியை கொண்டு வருவதற்குத் தேவையான வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்பு கடந்த காலங்களில் புதிய உயரங்களை தொட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் நோய்த்தொற்றுக்கு பிறகு உலகம் மீண்டு வருவதே இருநாட்டு உறவு முக்கிய பங்காற்ற வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடுகள் தற்போது அனுமதிக்கப்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வேளாண் துறையில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.


ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் கடற்குதிரை..!

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவில் கடற்குதிரை மரக்கிளை போன்ற அமைப்பின் மீது நின்று கொண்டுள்ளது.

 

தொடர்ந்து அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள சிறு துளை வழியாக ஏராளமான குட்டிகள் நீர் குமிழியை போன்று சாரை சாரையாய் ஜனிக்கின்றன. நீரில் விழும் குட்டிகள் அடுத்த நொடியே எந்தவித அச்சமுமின்றி வெடித்து சிதறும் பட்டாசுகளை போன்று பிரிந்து உற்சாகமாக நீந்த தொடங்குகின்றன.


திருவாடானை அருகே தொண்டியில் கொரோனாவால் இறந்த இந்துவின் சடலத்தை தமுமுகவினர் அடக்கம் செய்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (75) இவர் தொண்டியில் நகை கடை வைத்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று இரவு 7 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்க்கு திரும்பிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அருகில் உள்ள டாக்டரிடம் பரிசோதனை செய்ததில் ஜெகநாதன் இறந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இறந்தவரை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொண்டி தமுமுகவினர் அடக்கம் செய்ய முன் வந்தனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்துவின் சடலத்தை தமுமுகவினர் அடக்கம் செய்தது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது. தமுமுக மாநில செலாளர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் ஜிப்ரி உட்பட பலர் உடன் இருந்தனர்.


பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை இன்று துவக்கம்..!

பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்டோர் இன்று துவக்கி வைத்தனர் !!!

 

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் இன்று ரூ.71 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன் உள்ளிட்டோர் இன்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

 

ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் தேரம்பாளையம் முதல் மொங்கம்பாளையம் வரையிலான தார் சாலை அமைக்கும் பணி,ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி பொது நிதியில் இருந்து தேரம்பாளையம் முதல் மொங்கம்பாளையம் வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணி,ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை செய்யப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டது.

 

இதில் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி,ஒன்றிக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீசன்,சாமிநாதன்,ரத்தினம்,ஒப்பந்ததாரர்கள் மோகன் ராஜ்,ராமமூர்த்தி,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமுதா,வார்டு உறுப்பினர்கள் கார்த்திக்,செந்தில்,விஜயலட்சுமி,பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பெண்களுடன் செல்ஃபி எடுக்க சென்ற கரடி..!

செல்பி எடுப்பதில் மனிதர்களைப்போல கரடியும் ஆர்வமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி யுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் மூன்று இளம் பெண்கள் செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமைதியாக வந்த கருப்பு நிற கரடி ஒன்று இளம் பெண்ணின் பின்னால் தானம் செல்பி எடுப்பதை போல நின்று கொண்டு இருந்தது.

 

ஆள் உயர நின்ற அந்த கரடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.


திண்டுக்கல் மாவட்டம் செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாயுடு புரத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற மாணவி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாக பதினோராம் வகுப்பு பாடங்கள் வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக சண்முகப்பிரியா தமது தந்தையிடம் கேட்டபோது அவரால் வரமுடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா வீட்டில் இருந்த வின்டர் க்ரீன் என்ற தடை செய்யப்பட்ட தைலத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


டீ கொடுக்க சென்ற மாடிக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

சென்னை மண்ணடியில் டீ குடுக்கச் சென்ற சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஓட்டுநரான ஜாகிர் உசேன் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் இருந்ததை அறிந்த அவரது 15 வயது மூத்த மகன் வீட்டில் தயாரித்த டீயை பிளாஸ்கில் கொண்டு சென்று அருகில் உள்ள பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது வீட்டில் வந்து தருமாறு செல்போனில் கேட்டதால் ஏழாவது தளத்தில் இருந்த மூன்று பேருக்கும் டீயை கொடுத்துள்ளான்.

 

அப்போது கீழே இறங்கியபடி ஆறாவது மாடியில் லிஃப்ட் கட்ட தயார் செய்து வைத்திருந்த பள்ளத்திலிருந்து தரைதளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.