--- --:--:-- --

குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய மக்களை அகதிகளாக மாற்ற முயற்சி

6

குடியுரிமை சட்டத் திருத்தம் மூலம் படிப்படியாக இஸ்லாமிய மக்களை இந்தியாவில் அகதிகளாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததை விமர்சித்தார். இதுவே ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவ்வாறு இருந்திருப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

 

மேலும் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்ததற்கு காரணம் படிப்படியாக இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றவும், பின்னர் அவர்களின் குடியுரிமையைப் பறித்து இந்தியாவில் அகதிகளாக ஆக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon