--- --:--:-- --

அரசு கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சலால் சுமார் 400 கோழிகள் உயிரிழப்பு..!

9

ஜார்கண்ட் புஹாரா மாவட்டத்திலுள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சலால் கடந்த ஐந்து நாட்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கொல்கத்தா ஆய்வகம் முடிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் அரசு உஷார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.

 

சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்குமாறு பொக்காரா துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இறந்த கோழிகளின் மாதிரிகள் கொல்கத்தா, மத்திய பிரதேச மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் பொக்காரா மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணை பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon