உயிரை பணயம் வைத்து இளைஞரை மீட்ட ராணுவ வீரர்கள்..!
கேரளாவில் மலையில் சிக்கிய இளைஞரை நாற்பத்தி மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பாலக்காடு மாவட்டம் மலப்புழா வை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7ஆம் தேதி அவரது நண்பர்களுடன் மலை ஏற்றம் சென்றுள்ளார்.
மலையேற்றத்தில் நடுவில் கால் இடரி அதில் விழுந்து விடுகிறார். அப்போது சிறிய குழியில் சிக்கிக் கொண்டார். நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால் முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் உதவியை நாடினார்.
இந்த நிலையில் ராணுவ வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.





