சாலையோரம் புகுந்த ஆள் இல்லாத டிராக்டர்..!
மகாராஷ்டிராவில் புனேவில் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தேநீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது தாழ்வான சாலையில் இறங்கி வந்து அங்கிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.





