திமுகவில் இணைந்த பிறகும் அநாதையாகவே நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!
திமுகவில் இணைந்த பிறகும் தான் ஒரு அநாதையாகவே நடத்தப்பட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து திமுகவில் சேர்ந்த ஐயப்பனுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படாததால் அவர் மிகுந்த அதிருப்தியில் உள்ளார்.
இந்த அதிருப்தியின் காரணமாக, சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக ஐயப்பன் தற்போது களம் இறங்கியுள்ளார்.





