--- --:--:-- --

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்….கால்சென்டரில் மக்களுக்காக பணியாற்றும் நடிகை நிகிலா விமல்!

2

ஊரடங்கு என்பது மக்களுக்கு உதவுவதற்காக நடிகை நிகிலா விமல் கேரளாவில் உள்ள கால் சென்டரில் தன்னார்வலராக செய்தி ஆற்றி வருகிறார். வெற்றிவேல், தம்பி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை நிகிலா விமல் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து கால் சென்டரில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

 

ஊரடங்கின் போது வீடுகளில் முடங்கி உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுப்பதை ஒருங்கிணைக்க இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேவையாற்ற தன்னார்வலர்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த நிகிலா விமல் கால் சென்டரில் தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon