நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கம்..!
நடிகை மீரா மற்றும் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தாக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கேரளாவின் ஆலப்புழாவில் அவரது ஆண் நண்பருடன் சேர்த்து கைது செய்தனர். தற்போது அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோ பரவி வருவதால் அவரது யூடியூப் சேனலை முடக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






