நடிகர் விவேக் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள சொந்த கிராமம்..!
சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைவால் அவரது சொந்த கிராமமே சோகத்தில் உள்ளது. விவேக்கின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் பெருங்கோட்டூரில் உள்ள கிராமத்தில் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.
சென்னைக்கு செல்ல முடியாத அவரது உறவினர்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து அவரது உடல் பார்வைக்கு வைக்கப் பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் வடித்தனர்.






