தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை..!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேல் யாத்திரையை பாஜக கைவிடுவதே நல்லது என்றும், இதுகுறித்து பாஜக மேலும் வலியுறுத்தக் கூடாது என்றும் கூறினார்.
தடையை மீறி யாத்திரை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.







