காரின் கதவை திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்து..!
பெங்களூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திடீரென திறந்ததால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் விபத்தில் சிக்கிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
போக்குவரத்து மிகுந்த சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த நபர் பின்னே வரும் வாகனங்கள் குறித்து கவனமின்றி கார் கதவைத் திறந்தார். அப்பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கார் கதவின் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அவர் மீது மற்றொரு கார் ஏறியது.





