வகுப்பில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இளைஞர்..!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு நடந்து கொண்டிருந்த வகுப்பில் அமர்ந்திருந்த ராஜா என்ற இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு நிலை குலைந்து மேசையின் மீது விழுந்தார்.
சக மாணவர்கள் ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






