கிணற்றில் சிக்கி தவித்த நல்ல பாம்பு..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வாரமாக இருந்த நல்ல பாம்பு மீட்கப்பட்டுள்ளது. கலசம் பாக்கம் கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிக்கித் தவித்த நல்ல பாம்பை மீட்க ஒரு வாரமாக பொதுமக்கள் போராடினர்.
நீண்ட முயற்சிக்கு பிறகு சமூக ஆர்வலர் செல்லா என்பவர் கிணற்றில் கயிறு மூலம் உள்ளே இறங்கி பாம்பை மீட்டனர்.






